TamilsGuide

இம்ரான் கான் கட்சிக்கு தடைவிதிக்கும் பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மூன்று வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முக்கிய வழக்குகளில் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் கட்சி நாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்தொடர்பு துறை மந்திரி அட்டாயுல்லா டரார் தெரிவித்துள்ளது.

அக்கட்சியை தடை செய்வதற்கு போதுமான தெளிவான சாட்சிகள் உள்ளது. தடைக்கான வேலைகளை அரசு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இம்ரான் கட்சிக்கு குறைந்தபட்சம் இடங்கள் நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இது ஆளும் கூட்டணி ஆட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கான் கட்சி பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. இதனால் இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.
 

Leave a comment

Comment