TamilsGuide

டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளால் சூழப்பட்டிருப்பதாகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் தான் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை, அந் நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்கான டொனால்ட் ட்ரம் பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையில் இருந்து வெளியேறியதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment