TamilsGuide

ஐ.எஸ். உடன் தொடர்பு - 30 பேரை அதிரடியாக கைது செய்யது துருக்கி

துருக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆறு மாகாணங்களில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். உடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் வகையில் 30 பேரை கைது செய்துள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி அலியெர்லிகயா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை அங்காரா, அன்டால்யா, புர்ஸா, மெர்சின், ஒர்டு, இஸ்தான்புல் ஆகிய மாகாணங்களில் நடைபெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை சுமார் 3 ஆயிரம் பேர் ஐ.எஸ். பயங்கரவாத குழுவுடன் தொடர்ந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment