TamilsGuide

தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவின் தலைநகரான சியோலில் இருந்து தெற்குப் பகுதியில் 45 கி.மீட்டர் தொலைவில் உளள் ஹ்வாசியோங்வில் உள்ள முக்கியமான பேட்டரி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தின்போது மாயமான 21 தொழிற்சாலை தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதியானது. அவர்களின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர். தொழிற்சாலையில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தியபோது ஒரு தொழிலாளர் மாரப்படையால் உயிரிழந்ததை மீட்புப்படையினர் கண்டு பிடித்தனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஆறு பேர் லோசான காயத்துடன் உயிர்தப்பினர். இன்னும் ஒரு தொழிலாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொழிற்சாலைக்குள் சி்க்கி உள்ளாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

லித்தியம் பேட்டரி தொழிற்சாலை என்பதால் தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். தீ விபத்து ஏற்பட்டபோது மூன்று மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் 35 ஆயிரம் லித்தியம் பேட்டரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment