TamilsGuide

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு கிரீன் கார்டு - டிரம்ப்-ன் மாஸ்டர் பிளான்

அமெரிக்காவில் படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் கார்டு எளிதாக கிடைத்துவிடாது. கிரீன் கார்டு பெற்றால் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் குடியுரிமை விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது விசயத்தில் மற்ற தலைவர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவராக இருந்தார்.

வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் அவர்களுடைய நாட்டிற்கு திரும்பி செல்லக்கூடிய நிலை ஏற்படும் சூழ்நிலையான முடிவுகளை எதிர்கொண்டார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே... என்ற கொள்கை கொண்டவர்.

தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் போட்டியிட இருக்கிறார். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குடியுரிமை தொடர்பான தனது முந்தைய பேச்சில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

போட்காஸ்ட் ஒன்றில் பேசிய டொனால்டு டிரம்ப் இங்கு கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் தங்குவதற்கு அவசியமானது கிரீன் கார்டு. இது ஜூனியர் கல்லூரிகளுக்கும் இது அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "முன்னிலை கல்லுரிகள் அல்லது கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். இந்த திட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்றால், அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள். சீனா திரும்புவார்கள்.

இதே அடிப்படையிலான கம்பெனிகளை அவர்களுடைய இடத்தில் தொடங்குவார்கள். அவர்கள் பில்லியனர்களாகி ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதை இங்கே செய்யலாம்" என்றார்.
 

Leave a comment

Comment