TamilsGuide

கனடாவில் அதிர்ச்சி சம்பவம்... வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நால்வர்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் நகரமொன்றில் அமைந்துள்ள வீடொன்றில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம் என பொலிஸார் இந்த சம்பவத்தை விபரித்துள்ளனர்.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமையானவையா அல்லது விபத்தா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தினால் பொதுமக்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாரியளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Leave a comment

Comment