TamilsGuide

பொசன் பௌர்ணமி தினம் - நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகள் முன்னெடுப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன உள்ளிட்ட விகாரைகளில் விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

இதற்காக நாடளாவிய ரீதியாகவும் இருந்து பௌத்தர்கள் குறித்த விகாரைகளுக்கு சென்றுள்ள நிலையில், இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியாகவுள்ள சுமார் 11 ஆயிரம் விகாரைகளில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு, நாடளிவாய ரீதியாக பல்வேறு இடங்களில் தானசாலைகளும் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

47,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் 700 இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொசன் பொளர்ணமி தினம் நடைபெறும் மிஹிந்தலை, ஸ்ரீ மகாபோதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன ஆகிய விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனுராதபுர நீர்த்தேக்கங்களில் குளிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் விகாரைகளுக்கு அருகில் 4,000 இக்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment