TamilsGuide

நகைக்கடைக்குள் சூறாவளியாய் புகுந்த கும்பல் - அடுத்து நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பி.என்.ஜி. ஜூவல்லர்ஸ். இதன் அமெரிக்க கிளை கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது.

கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் பகுதியில் உள்ள நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பல்வேறு நகைகளை சில நிமிடங்களில் கொள்ளை அடித்துச் சென்றது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு வெளியாகவில்லை.

விசாரணையில், கொள்ளையர்கள் கடையை தொடர்ந்து நோட்டமிட்டதும், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

நகை கொள்ளை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment