TamilsGuide

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுதம்-புகையிர நிலைய அதிகாரிகள்

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்

புகையிர பொது கண்காணிப்பாளருடனான கலந்துரையாடலின் போது, ​​எங்களின் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்தன.

ஆனால், பதவி உயர்வு மற்றும் பிற விவகாரங்கள் குறித்து எங்களால் குறிப்பிட்ட பதில் அளிக்க முடியாததால், செயல் அமைச்சர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் அமைச்சரவைப் பத்திரத்திற்கும், அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை துறைக்கு பொறுப்பான அமைச்சர் கால அவகாசம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment