TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடி காரணமாக ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாம் ஆடர் செய்யாத மடிக் கணனி ஒன்று வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

தாம் ஆடர் செய்யாத போதிலும் குறித்த மடிக் கணனி பெட்டியில் தமது வீட்டு முகவரி காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் குறித்த பெண்ணும் அவரது கணவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் போது குறித்த தம்பதியினரின் கடன் அட்டை கணக்கிலிருந்து 4900 டொலர்கள் அறவீடு செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

நூதமான முறையில் கடன் அட்டை தகவல்களை திருடி மடிக்கணனி ஆடர் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்து, மோசடிகாரர்கள் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கே பொருளை அனுப்பி , அது டெலிவரி செய்யும் போது வீட்டில் யாரும் இல்லாவிட்டால் அந்தப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தி இந்த கடன் அட்டை நிறுவனத்திடமிருந்து குறித்த தம்பதியினர் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வங்கிக் கணக்குள், கடன் அட்டைகள் உள்ளிட்டன தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment