கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 190 ஆவது வருடாந்த திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், பிரதான திருப்பலி ஆராதனைகள் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் தூர பிரதேசங்களில் இருந்து கொச்சிக்கடைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.