பிறப்பு 06 JUL 1948 / இறப்பு 09 AUG 2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இல- 34, முகாந்திரம் வீதி, கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா அச்சுதபாதசுந்தரம் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கலாஜினி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புத் தம்பியும்,
சுதர்சன், சுஜீவன், சுதாஜீவ், சுபராஜீவ், சுஜானிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜபாமார்டீனா, விஜிதா, கஜாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரா, ஜெய்தேவ், சனா, சிதானா, சிதான், ரீதீஸ், வைரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 13-08-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94775939594
Phone : +94773238555


