TamilsGuide

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4,200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இதுவரையில் எமது காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21,000முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அவற்றில் முப்படையினர்,பொலிஸார்,இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில் 14,988விண்ணப்பங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவற்றில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 4,200விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக இழப்பீட்டு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 2000, சிபாரிசு கடிதங்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு இறப்பு சான்றிதழைப்பெற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டுள்ளது” இவ்வாறு ரூபராஜா தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment