TamilsGuide

நுவரெலியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி

வசந்த காலத்தை முன்னிட்டு  நுவரெலியாவிலுள்ள விக்டோரியா பூங்காவில்  நேற்று முன்தினம்  2024 ஆம் ஆண்டுக்கான வசந்த மலர் கண்காட்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இந்திய மேலதிக உயர்ஸ்தானிகரான வைத்தியர் ஆதிரா சரசன் ஆகியோர் தலைமையில் குறித்த மலர் கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை உள்ளகத் தோட்டங்கள் மற்றும் வெட்டுப் பூக்கள் போன்ற வடிவங்களில் பல கூறுகளை உள்ளடக்கிய வசந்த மலர் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நேற்று நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நடைபெற்றது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வசந்த மலர் கண்காட்சியை காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த மலர்கண்காட்சியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment