TamilsGuide

சீனாவில் பாரிய வெள்ளப் பெருக்கு - 60,000 பேர் வெளியேற்றம்

சீனாவின் குவான்டோங் மாகாணத்தில் கடந்த சில நாட்களகாப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அங்கிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அனர்த்தத்தினால் இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment