TamilsGuide

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் முதல் 15 நாட்களில் 82,531 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

இதன்படி, 2024ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 718,315 ஆக அதிகரித்துள்ளது.

இன்னிலையில் ஏப்ரல் முதல் 15 நாட்களில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 14,207.பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இது தவிர இங்கிலாந்தில் இருந்து 9,095 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 8,508 பேரும், ஜெர்மனியில் இருந்து 6,489 சுற்றுலாப் பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment