TamilsGuide

அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தருமாறு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது அவர் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தனக்கு தெரியும் என்றும் எனவே அது தொடர்பாக விசாரிப்பதற்கு அழைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அருட்தந்தை சிறில் காமினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment