TamilsGuide

வவுனியாவில் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

இதன் போது அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு  தீபம் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Leave a comment

Comment