TamilsGuide

சஜித்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி வழங்கப்படும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கினால் ரணில்

விக்கிரமசிங்கவிற்கு பதவி ஒன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு ஜக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்குமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போது ஒருவரின் தோளில் அமர்ந்தே பயணம் செய்வதாகவும்  அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment