TamilsGuide

அநுர, சஜித் போன்றவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – வஜிர அபேவர்தன

அநுர, சஜித்  போன்றவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டைக் கடன் பொறிக்குள் தள்ளிய குற்றச்சாட்டில் இருந்து நாட்டின் ஆட்சிக்கு பங்களிப்புச் செய்த எந்தவொரு அரசியல் கட்சியாலும் விடுவிக்க முடியாது எனவும், அநுர வாங்கிய கடனை தற்போது ரணில் விக்கிரமசிங்க செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜே.வி.பியும் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பெற்ற கடன்களை தற்போது ரணில் விக்கிரமசிங்க செலுத்தி வருவதாகவும், தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பெற்ற கடனையும் ரணில் விக்ரமசிங்க செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment