TamilsGuide

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடரும் போராட்டம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 25 ஆவது நாளாக  நேற்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொது மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்து இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment