TamilsGuide

பண்டிகைக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் ரூபாய் வருமானம்

கடந்த 6 நாள்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சுமார் 235 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வாகனங்களின் நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட வீதிகளில் 53 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பிரியந்த சூரியபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment