TamilsGuide

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

மறைந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கியதில் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பாலித தெவரப்பெரும சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலித தெவரப்பெரும, 2010 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment