TamilsGuide

ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரி உண்மைகளை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும்.  காலநீடிப்பு இல்லாமல் விரைவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இந்தியா இலங்கைக்கு முக்கியமானது நாடு.  அந்த உறவில் விரிசல்கள் ஏற்படாத வகையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்” இவ்வாறு வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment