TamilsGuide

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்டவர் கைது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம்  கடுமையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில்  நபரொருவரைக்  கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்கு உணவக உரிமையாளர்  கொத்துரொட்டியொன்றினை 1900 ரூபாய்க்கு விற்பனை செய்ய  முற்பட்டதாகவும், இதன்போது விலை அதிகமாக இருப்பதாக  சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவானது வைரலானதைத் தொடர்ந்து  சந்தேகநபரான உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment