TamilsGuide

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi )உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இம்மாதம் 24 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என  நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்க

ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Comment