TamilsGuide

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதிக்கு அஞ்சலி

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதிக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப்பவனி மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த ஊர்தியானது வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment

Comment