TamilsGuide

நாட்டிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் தீவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,537 ஆகும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருடத்தில் ஆறு இலட்சத்து 86,321 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment