TamilsGuide

மொனராகலையில் துப்பாக்கிச்சூடு - இருவர் காயம்

மொனராகல மாவட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மொனராகல மாவட்டத்தின், ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் துப்பாக்கி சூட்டினை நடத்திய நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரும் அவரது உறவினர்களும் புத்தாண்டு விருந்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 24 வயது மற்றும் 42 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a comment

Comment