TamilsGuide

1955 இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும்

போக்குவரத்து விதிகளை மீறும் பஸ் சாரதிகள் தொடர்பில் தெரிவிக்க 1955 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் இயங்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தனின் போது பஸ்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த அவசர தொலைபேசி இலக்கத்தில் பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment