TamilsGuide

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய வலஹங்குனவே தம்மரதன தேரர் இதனைத் தெரிவித்தார்

அந்த துறைகளை பலப்படுத்தாமல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment