TamilsGuide

உளுந்துக் கொள்வனவில் பல இலட்சம் மோசடி! - வவுனியா விவசாயிகள் கவலை

வவுனியாவில்  தனியார் நிறுவனமொன்று  விவசாயிகளிடம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான உளுந்தைக்  கொள்வனவு செய்துவிட்டு பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த எட்டு விவசாயிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து 20,000 கிலோகிராம்  உளுந்து  கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள போதும் பொலிஸார் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு  முகம் கொடுத்துவருவதாகவும்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment