TamilsGuide

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும்

அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகவும்  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரமழான் பெருநாளை முன்னிட்டு சிறைக்கைதிகளாக உள்ள முஸ்லிம் கைதிகளை நாளை தொடக்கம் பார்வையிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சிறைக்கைதிகளின் உறவினர்களினால் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டுவரும் உணவு, இனிப்பு பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், ஒருவருக்கு தேவையான அளவு கொண்டுவர முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் உரிய சுகாதார பாதுகாப்பு முறைமையின் கீழ் குறித்த பொருட்களை பெற்றுக்கொடுக்க அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment