TamilsGuide

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

”மின்சார திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக” மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சட்டமூலத்தை இந்த வார வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும்  கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தினத்தில் இருந்து 2 வாரங்களுக்கு அதனை சவாலுக்கு உட்படுத்த பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment