TamilsGuide

நாடளாவிய ரீதியில் 16 நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை, மிட்டியகொட, கெசல்வத்தை, ரத்கம, கல்கிஸ்ஸ மற்றும் அங்கொட ஆகிய பிரதேசங்களில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 8 பேரையும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 8 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment