TamilsGuide

பள்ளிவாசல்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக,குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும்  இராணுவத்தினர் குறித்த பாதுகாப்பு திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 2,453 பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment