TamilsGuide

இலங்கை தேயிலையின் தரத்தை பாதுகாப்பதற்கு கூட்டு வேலைத் திட்டம்

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் நிலையை பாதுகாக்கும் வகையில் கூட்டு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கையின் முன்னணி தனியார் நிறுவனமான யுனிலீவர் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் .மகிந்த அமரவீர தலைமையில், நிலையான பெருந்தோட்டத் துறைக்கான அரச தனியார் மக்கள் கூட்டுத் திட்டம் என்ற பெயரில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தோட்ட கைத்தொழில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படுவதன் முக்கிய நோக்கம் இலங்கையில் தேயிலை தொழிற்துறையை வலுப்படுத்துவதும் சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்படுத்தலுடன் தேயிலை உற்பத்தி செய்வதுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment