TamilsGuide

வவுனியாவில் புகையிரத விபத்து - ஒருவர் படுகாயம்

அனுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் வவுனியா, ஓமந்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையினூடாக கப் வாகனம் ஒன்று கடக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கப் ரக வாகனம் கடுமையான சேதமடைந்ததுடன் அதன் சாரதி படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் புகையிரதத்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு மற்றொரு புகையிரதத்தில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment