TamilsGuide

கிளிநொச்சியில் கத்திக்குத்துத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தனிப்பட்ட விரோதம் காரணமாக குறித்த கொலைச் சம்பவம் அரங்கேரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்  30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் எனத் தெரிய வந்துள்ளது. இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment