TamilsGuide

நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் தமிழ் சினிமாவில் ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
  
குறுகிய காலத்துக்குள்லேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவர் தொடர்ந்து தமிழில் சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை ஆகிய படங்களில் நடித்து பிரபல்யமானார்.

இந்நிலையில் இவரின் தந்தை ஜோசப் பிலிப் (83) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

ஜோசப்க்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின் தவிர மூன்று குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment