TamilsGuide

சிங்கள நடிகை தமிதா அபேரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் இன்று கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment