TamilsGuide

பாணந்துறையில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே  குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த நபரிடமிருந்து 76, 796 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment