TamilsGuide

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறப்பு

மன்னார்- மாந்தை, குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களினால் நேற்றைய தினம் (03) குறித்த உற்பத்தி நிலையம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் க.அரவிந்தராஜ் ,மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உலக உணவுத் முகாமைத்துவ அலகு தலைமை அதிகாரி ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment