TamilsGuide

தங்கொடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

தங்கொடுவ – கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள  வீடொன்றில் இருந்து  பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கழுத்து  நெரித்து கொல்லப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய கட்டுகெந்த என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை தங்கொடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment