TamilsGuide

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

மன்னார் மாவட்டத்தின் ஈச்சளவக்கை கிராமத்திலுள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காயநகர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டு கழகம் அதிரடியான முடிவை எடுத்து கழகத்தின் ஆறு பேர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவருவரும் இணைந்து நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன் போது கசிப்பு உற்பத்தியாளர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். கசிப்பு பரல் இரவாகியும் அவ்விடத்தில் இருந்த நிலையில் குறித்த குழுவினரால் மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்கள் அடம்பன் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

சட்டவிரேத செயற்பாட்டாளர்களினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீறி செயற்பட்ட குறித்த குழுவினர் துணிச்சலாக செயற்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து இருவர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
 

Leave a comment

Comment