TamilsGuide

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தாதியர்கள்

நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தெழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த தெழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹடவல தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment