TamilsGuide

எல்லாம் காசுக்காக தான்.. எது பண்ணாலும் அது வரும் - நடிகை ஓவியா

கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் குறித்து நடிகை ஓவியா பேசியுள்ளார். 

களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், 90ML , காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகியிருந்தது.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் எதார்த்தமான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது. தற்போது ராஜ பீமா என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார்.

ஓவியா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "நம்ம எது பண்ணாலும் பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. அவங்களுக்கு அதுல இருந்து ஏதாவது பயன் இருக்கும்.

இல்லனா ஒரு மன நிம்மதி இருக்கலாம். இப்படி பேசுறவங்க எல்லாம் காசுக்காக, TRP-க்காக எல்லாம் பேசுவாங்க. ஒரு நடிகையா இருக்கும்போது அதெல்லாம் வரும். அதெல்லாம் நம்மளால தடுக்க முடியாது. நம்ம அதப்பத்தி கண்டுக்காம இருந்தாலே போதும்" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment