TamilsGuide

கனடாவில் தமிழர்களால் நிறைந்து வழிந்த சொற்கோ வி. என். மதிஅழகன் நூல் அறிமுக விழா

கனடா- ஸ்காபுறோ நகரில் கடந்த சனிக்கிழமை 23ம் திகதி நடைபெற்ற 'சொற்கோ வி. என். மதிஅழகன்' நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர்  இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுகவிழா

தமிழர்களால் நிறைந்து வழிந்த  ஒன்றாக வெற்றிகரமாக நடைபெற்று முடிவுக்கு வந்தது.

கனடாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் உள்ள ஊடகவியலாளர்கள். நடன இசை ஆசிரிய ஆசிரியைகள் கலை இலக்கிய நண்பர்கள். கல்வியாளர்கள். பேராசிரியர்கள் நண்பர் மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் வர்த்தகப் பெருமக்கள் உட்பட 500க்கும் அதிகமான பார்வையாளர்கள் மண்டபத்தை நிறைத்த வண்ணம் அமர்ந்திருக்க பாராட்டுரைகள் மற்றும் சிறப்புரைகள் ஆகியன இடம்பெற்றன

Leave a comment

Comment