TamilsGuide

திருகோணமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள்

திருகோணமலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 1008 சிவலிங்க சிலைகள் வைக்கப்படவுள்ளதாகத்  தெரிவித்து” திருகோணமலை கோகண்ணாபுர பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த தேரர்களால்  ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்க முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment