TamilsGuide

களுத்துறையில் தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக 12 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதுடன் 7 மற்றும் 8 ஆம் தரங்களில் கல்வி கற்கும் அந்த வயதுப் பிரிவு மாணவர்களுக்கு 280 தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும், அதன் பிறகு குழந்தைகள் மயக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் வெளிபடுத்தப்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment